பிரதமர் அலுவலகம்

கிராமப்புற வீடுகளில் 60 சதவீதம் அளவுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளதற்காக பிரதமர் மகிழ்ச்சி தெரி்வித்துள்ளார்

Posted On: 04 APR 2023 7:47PM by PIB Chennai

கிராமப்புற வீடுகளில் 60 சதவீதம் அளவுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரி்வித்துள்ளார். இது சிறப்பான சாதனை என்றும், பல்வேறு தரப்பினருக்கு அதிகாரம் அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப்பணிகளை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க  எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறோம் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

“இது சிறப்பான சாதனை, பல்வேறு தரப்பினருக்கு அதிகாரம் அளிக்கும் . இந்தப்பணிகளை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க  எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறோம்.”

****


(Release ID: 1913650)

AP/IR/AG/RR



(Release ID: 1913737) Visitor Counter : 123