பிரதமர் அலுவலகம்

மகாவீர் ஜெயந்தி அன்று பகவான் மகாவீர்-ன் உன்னத போதனைகளை பிரதமர் நினைவு கூர்ந்தார்

Posted On: 04 APR 2023 10:09AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாவீர் ஜெயந்தி அன்று பகவான் மகாவீர்-க்கு அஞ்சலி செலுத்தினார். அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு பகவான் மகாவீர் வழி காட்டியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்:

"இன்று ஒரு சிறப்பான நாள். பகவான் மகாவீர்-ன் போதனைகளை நினைவு கூரும் நாள். பகவான் அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளமான சமூகத்தை உருவாக்குவதற்கு வழிகாட்டியுளார். அவரது வழியில் நாமும் ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த சேவையாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

------

AP/JL/KPG



(Release ID: 1913526) Visitor Counter : 156