பிரதமர் அலுவலகம்

சுதந்திரத்திற்கு பிறகு முதன் முறையாக அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் எல்லைப் பகுதிக்கு 278 கி,மீ தார்ச்சாலை அமைத்து சாதனை புரிந்த எல்லை சாலைகள் அமைப்பிற்கு பிரதமர் பாராட்டு

Posted On: 23 MAR 2023 9:16PM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் குருங் குமே மாவட்டத்தில் உள்ள தொலைதூர பகுதிகளில் ஒன்றான ஹுரி வரை செல்லும் 278 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஹப்போலி-சார்லி-ஹுரி சாலையை சுதந்திரத்திற்கு பிறகு முதன்முறையாக தார்ச்சாலை அமைத்து சாதனை புரிந்த எல்லை சாலைகள் அமைப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

எல்லை சாலைகள் அமைப்பின் தொடர் ட்விட்டர் பதிவுகளைப் பகிர்ந்து அவர் கூறியதாவது:

“பாராட்டத்தக்க சாதனை!”

***

(Release ID: 1910184)

AD/RB/KRS

 



(Release ID: 1910279) Visitor Counter : 114