பிரதமர் அலுவலகம்

எரிசக்தித்துறையில் தற்சார்பை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 17 FEB 2023 10:28AM by PIB Chennai

வெளிப்படையான உரிமக் கொள்கையின் கீழ், ஒடிசாவில் உள்ள மகாநதி கரையோரப் படுகையில், பூரி-1 என்னும் முதல் ஆய்வுக் கிணறைத் தொடங்கி, எரிசக்தித் துறையில் இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றுவதற்கு ஆயில் இந்தியா  நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரியின் ட்விட்டரைப் பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர்,  கூறியிருப்பதாவது;

"இது  குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். எரிசக்தி துறையில் தற்சார்பை எட்டுவதற்கான நமது முயற்சிகளுக்கு இது ஊக்கமளிக்கிறது."

***

(Release ID: 1900034)

VL/PKV/AG/RR



(Release ID: 1900066) Visitor Counter : 167