பிரதமர் அலுவலகம்

முக்கிய துறைகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 07 JAN 2023 3:53PM by PIB Chennai

இணைப்பு, கல்வி, சுற்றுலா மற்றும் எரிசக்தி போன்ற முக்கிய துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சிப் பணிகளுக்காக நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோவின் ட்வீட்டுக்கு பதிலளித்த பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”இணைப்பு, கல்வி, சுற்றுலா மற்றும் எரிசக்தி போன்ற முக்கிய துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சிப் பணிகளுக்காக நாகாலாந்தின் எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நாகாலாந்தின் ஆற்றல்மிக்க மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது”.

*****

MS/GS/DL



(Release ID: 1889438) Visitor Counter : 135