பிரதமர் அலுவலகம்
ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகை அறிவிப்பு
Posted On:
29 DEC 2022 10:00AM by PIB Chennai
ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000மும் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்பை அறிந்து மிகவும் துயரமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi”
---------------
(Release ID: 1887190)
RB/PKV/RR
(Release ID: 1887193)
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam