பிரதமர் அலுவலகம்
பிரபல மராத்தி லாவணி பாடகி சுலோச்சனா தய் சவானின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
10 DEC 2022 6:00PM by PIB Chennai
புகழ்பெற்ற மராத்தி லாவணி பாடகி சுலோச்சனா தய் சவானின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"மகாராஷ்டிராவின் கலாச்சாரத்தை, குறிப்பாக லாவணியை ஊக்குவிப்பதில் சுலோச்சனா தய் சவான் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக, வரும் தலைமுறையினர் அவரை நினைவு கூர்வர். அவர் இசை மற்றும் நாடகத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி."
இவ்வாறு பிரதமர் தமது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
******
SRI / PLM / DL
(வெளியீட்டு அடையாள எண்: 1882372)
வருகையாளர் எண்ணிக்கை : 194
இந்த வெளியீட்டை படிக்க:
Punjabi
,
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam