பிரதமர் அலுவலகம்
இந்தியா பூட்டான் செயற்கைக்கோள் பூட்டான் மக்களுடனான நமது வலுவான உறவுக்கு சான்றாகும்: பிரதமர்
கூட்டாக உருவாக்கப்பட்ட இந்தியா பூட்டான் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக டிஐடிடி - பூட்டான் மற்றும் இஸ்ரோவைப் பிரதமர் பாராட்டினார்
Posted On:
26 NOV 2022 6:09PM by PIB Chennai
இந்தியா பூட்டான் செயற்கைக்கோள் பூட்டான் மக்களுடன் எங்களின் சிறப்பான உறவுக்கு சான்றாகும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். கூட்டாக உருவாக்கப்பட்ட இந்தியா பூட்டான் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை (டிஐடிடி), பூடான் மற்றும் இஸ்ரோவுக்கு திரு. மோடி பாராட்டு தெரிவித்தார்.
இந்தியா பூட்டான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது குறித்து பூட்டான் மன்னர் அளித்த செய்தியை குறித்து பூடான் பிரதமர் செய்த ட்வீட்டிற்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
“இந்தியா பூட்டான் செயற்கைக்கோள் பூட்டான் மக்களுடன் எங்களின் சிறப்பான உறவுக்கு சான்றாகும். கூட்டாக உருவாக்கப்பட்ட இந்தியா பூட்டான் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக டிஐடிடி – பூட்டான் (@dittbhutan) மற்றும் இஸ்ரோவிற்கு (@isro) வாழ்த்துக்கள்”
**************
PKV / SRI / DL
(Release ID: 1879149)
Visitor Counter : 118
Read this release in:
Kannada
,
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam