பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் இசைக்கருவிகள் ஏற்றுமதி அதிகரிப்புக்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 26 OCT 2022 9:12PM by PIB Chennai

இந்தியாவின் இசைக்கருவிகள் ஏற்றுமதி அதிகரித்திருப்பது குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் இசைக்கருவிகள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது 2013-ஆம் ஆண்டின் இதேகால கட்டத்துடன் ஒப்பிடும்போது 3.5 சதவீதம் அதிகமாகும்.

வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயலின் ட்விட்டை பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“இது ஊக்கம் அளிக்கிறது. இந்திய இசை உலக அளவில் புகழ் பெற்று வருவதால், இந்த துறை மேலும் வளர வாய்ப்பு உள்ளது”.

 **************

MSV/KG/IDS


(रिलीज़ आईडी: 1871170) आगंतुक पटल : 180
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam