பிரதமர் அலுவலகம்
மக்களுக்கு பிரதமர் தன்தேரஸ் வாழ்த்து
प्रविष्टि तिथि:
22 OCT 2022 7:21PM by PIB Chennai
தந்தேரஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்துடன் தந்தேரஸின் நெருங்கிய தொடர்பை விளக்கியுள்ள பிரதமர், இந்தியாவின் மருந்துகள் மற்றும் யோகாவில் உலகளாவிய கவனத்தை ஈர்த்திருப்பதை அங்கீகரித்து, இந்தத் துறைகளில் பணியாற்றுபவர்களின் பாரம்பரிய முயற்சிகளைப் பாராட்டினார். உலகளாவிய ஆயுஷ் உச்சி மாநாட்டில் தாம் ஆற்றிய உரையையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு;
“தந்தேராஸின் மங்களகரமான சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்கள். நமது தேசத்தின் மக்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படுவார்கள். செல்வத்தை உருவாக்கும் உணர்வு நம் சமூகத்தில் மலரட்டும்’’.
“தந்தேரஸ் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.அண்மைக்காலத்தில், இந்தியாவின் பாரம்பரிய மருந்துகள் மற்றும் யோகா உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்தத் துறைகளில் பணியாற்றுபவர்களை நான் பாராட்டுகிறேன். சமீபத்திய உலகளாவிய ஆயுஷ் உச்சி மாநாட்டில் எனது உரையைப் பகிர்ந்து கொள்கிறேன்’’.
***************
(रिलीज़ आईडी: 1870433)
आगंतुक पटल : 178
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam