பிரதமர் அலுவலகம்

சுஸ்லான் எனர்ஜியின் நிறுவனர் திரு துளசி தாந்தியின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 02 OCT 2022 1:18PM by PIB Chennai

முதுபெரும் வர்த்தக நிபுணரும், சுஸ்லான் எனர்ஜியின் நிறுவனருமான திரு துளசி தாந்தியின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

 

அவர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

 

‘நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அளப்பரிய பங்ளித்து, நிலையான வளர்ச்சியை நோக்கிய நம் நாட்டின் முயற்சிகளுக்கு வலு சேர்த்த முன்னோடி வர்த்தக தலைவராகத் திகழ்ந்தவர், திரு துளசி தாந்தி. அவரது அகால மறைவினால் துயரடைந்தேன். அன்னாரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.”

***********



(Release ID: 1864422) Visitor Counter : 140