பிரதமர் அலுவலகம்

முன்னாள் மத்திய அமைச்சர் திரு மாணிக்ராவ் காவிட்டின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 17 SEP 2022 7:45PM by PIB Chennai

முன்னாள் மத்திய அமைச்சர் திரு மாணிக்ராவ் காவிட்டின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

 

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

 

“முன்னாள் மத்திய அமைச்சர் திரு மாணிக்ராவ் காவிட் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். மிகுந்த அனுபவமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவராக அவர் திகழ்ந்ததோடு, பழங்குடி சமூகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி: பிரதமர் @narendramodi”

*******



(Release ID: 1860326) Visitor Counter : 106