பிரதமர் அலுவலகம்

செமிகண்டக்டர் மற்றும் தொடுதிரை உற்பத்திக்கு வேதாந்தா – ஃபாக்ஸ்கான் குழுமத்துடன் ரூ.1.54 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குஜராத் அரசு கையெழுத்திட்ட பின் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்


ரூ.1.54 லட்சம் கோடி முதலீடு என்பது பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கும்

Posted On: 13 SEP 2022 2:32PM by PIB Chennai

 

செமிகண்டக்டர் மற்றும் தொடுதிரை உற்பத்திக்கு வேதாந்தாஃபாக்ஸ்கான் குழுமத்துடன் ரூ.1.54 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குஜராத் அரசு கையெழுத்திட்ட பின் பிரதமர் திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்

இந்த முதலீடு பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்  என்று குறிப்பிட்ட பிரதமர், துணைத் தொழில்கள் உருவாக  உதவி செய்வதோடு  எம்எஸ்எம்இ-க்களுக்கும்  உதவும் என்றார்.

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்தர் படேல் பகிர்ந்துள்ள ட்விட்டர் செய்திக்கு  பதில் அளித்து பிரதமர்  வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு;

“இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் செமிகண்டக்டர்கள் உற்பத்தி நோக்கத்தை  விரைவுபடுத்துவதில் முக்கியமான ஒன்றாகும். ரூ.1.54 லட்சம் கோடி முதலீடு என்பது  பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கும். துணைத் தொழில்கள் உருவாக  உதவி செய்வதோடு  எம்எஸ்எம்இ-க்களுக்கும்  உதவும்”.

*********



(Release ID: 1858953) Visitor Counter : 157