பிரதமர் அலுவலகம்
ஓணம் பண்டிகையையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2022 9:08AM by PIB Chennai
ஓணம் பண்டிகையையொட்டி ஒவ்வொருவருக்கும் குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள மலையாள சமுதாய மக்களுக்கும், கேரள மாநில மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“அனைவருக்கும், குறிப்பாக மலையாள மாநில மக்கள் மற்றும் உலகம் முழுவதும் பரவியுள்ள மலையாள மொழி பேசும் மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்கள். இந்த பண்டிகை, இயற்கை அன்னையின் முக்கிய பங்கு, கடின உழைப்பாளிகளான நமது விவசாயிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. நமது சமுதாயத்தில் நல்லிணக்க உணர்வை ஓணம் மேலும் வலுப்படுத்தட்டும்.”
**************
(Release ID: 1857674)
(வெளியீட்டு அடையாள எண்: 1857707)
வருகையாளர் எண்ணிக்கை : 187
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam