பிரதமர் அலுவலகம்
அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற சான்றிதழை நாட்டிலேயே முதல் மாவட்டமாக பெற்ற மத்திய பிரதேசத்தின் பர்கான்பூர் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
22 JUL 2022 9:43PM by PIB Chennai
அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற சான்றிதழை நாட்டிலேயே முதல் மாவட்டமாக பெற்ற மத்திய பிரதேசத்தின் பர்கான்பூர் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்ட ட்விட்டர் செய்திக்கு பதில் அளித்த பிரதமர்,
“இத்தகைய போற்றத்தக்க சாதனையை நிகழ்த்தியதற்காக பர்கான்பூர் மாவட்டத்தின் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். மக்களின் கூட்டுமுயற்சியும், ஜல் ஜீவன் இயக்கம், திரு சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான மத்திய பிரதேச அரசின் துரிதமான நடவடிக்கைகளும் இல்லாமல் இது நிகழ்ந்திருக்காது”, என்று தெரிவித்தார்.
**********
(வெளியீட்டு அடையாள எண்: 1844133)
வருகையாளர் எண்ணிக்கை : 181
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam