பிரதமர் அலுவலகம்
மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் வாராந்திர விழாவை பிரதமர் தொடங்கி வைத்தார்
அரசின் கடன்சார்ந்த திட்டங்களுக்கான தேசிய இணைய தளத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்- ஜன் சமர்த் இணையதளம்
“நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை புதிய உத்வேகத்துடன் நிறைவேற்றுவதற்கான மற்றும் புதிய உறுதி மொழிகளை நாம் ஏற்பதற்கான தருணம் இது”
“பொதுமக்களின் பங்களிப்பை அதிகரித்துள்ளது வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுத்துள்ளது மற்றும் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது”
"குடிமக்களிடையே இழப்பு மற்றும் பெரிய கனவுகளின் மனநிலையிலிருந்து வெளியே வருவதற்கான புதிய நம்பிக்கையை நாங்கள் காண்கிறோம்"
“21ம் நூற்றாண்டில் இந்தியா மக்களை மையப்படுத்திய நிர்வாகத்தை நோக்கி செல்கிறது”
“சீர்திருத்தம், எளிமைப்படுத்துதல், எளிமை ஆகியவற்றின் மூலம் புதிய வசதியை நாம் அடைகிறோம்”
“புதுமையான, மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, ஆக்கப்பூர்வமான, புதிய சுற்றுச்சூழலை அமைப்பதற்கான நாடாக உலகம் நம்மை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறது“
“சாதாரண இந்தியரின் அறிவின் மீது நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். வளர்ச்சியில் அறிவார்ந்தவர்களாக பங்கேற்கும் வகையில் பொதுமக்களை நாம் ஊக்கப்படுத்தினோம்”
Posted On:
06 JUN 2022 12:09PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி மத்திய நிதி அமைச்சகத்தின் வாராந்திர விழாவை இன்று தொடங்கி வைத்தார். விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக இன்று (6-ம் தேதி) தொடங்கி வரும் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசின் கடன்சார்ந்த திட்டங்களுக்கான தேசிய இணைய தளத்தை அவர் தொடங்கி வைத்தார். கடந்த எட்டு வருடங்களாக இரண்டு அமைச்சகங்களும் மேற்கொண்ட பணிகள் குறித்த மின்னணு கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார். சிறப்பு 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்களை பிரதமர் வெளியிட்டார். இந்த நாணயங்களில் விடுதலை பெருவிழாவின் சின்னம் இடம் பெற்றிருக்கும். பார்வையற்றவர்களும் இந்த நாணயங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் இருக்கும்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நீண்ட சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பல்வேறு வகையில் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளனர். சிலர் அமைதி வழியிலும், சிலர் ஆயுதம் ஏந்தியும், சிலர் நம்பிக்கை மற்றும் ஆன்மீக வழியிலும் போராடியதை நாம் இன்று ஏற்றுக்கொள்ளவேண்டிய நாளாக இருக்கிறது.
சுதந்திரப் போராட்டத்தின் 75 - வது ஆண்டு விழாவை இன்று நாம் கொண்டாடிவரும் வேளையில், நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்பு பங்களிப்பை செய்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று பிரதமர் வலியுறுத்தினார். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை புதிய உத்வேகத்துடன் நிறைவேற்றுவதற்கான மற்றும் புதிய உறுதி மொழிகளை நாம் ஏற்பதற்கான தருணம் இது என்று அவர் கூறினார்.
கடந்த எட்டு வருடங்களாக இந்தியா பன்முக நடவடிக்கைகளில் பணியாற்றி வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இக்காலக் கட்டத்தில், பொதுமக்களின் பங்களிப்பை அதிகரித்துள்ளது நாட்டின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்துள்ளதாகவும், ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தூய்மை பாரத இயக்கம் ஏழை மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியதாகக் கூறினார். இலவச வீடுகள், மின்சாரம், சமையல் எரிவாயு சிலிண்டர், தண்ணீர் மற்றும் இலவச சிகிச்சை ஆகியவை ஏழை மக்களின் கண்ணியத்தை அதிகப்படுத்தி வசதிகளை மேம்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். கொரோனா தொற்று காலத்தில் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டதன் மூலம், பசி பற்றிய பயத்திலிருந்து விடுப்பட்டனர் என்று கூறினார். குடிமக்களிடையே இழப்பு மற்றும் பெரிய கனவுகளின் மனநிலையிலிருந்து வெளியே வருவதற்கான புதிய நம்பிக்கையை நாங்கள் காண்கிறோம் என்று தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அரசாங்கத்தை மையப்படுத்திய நிர்வாகமாக நாடு இருந்தது என்று பிரதமர் கூறினார். ஆனால் தற்போது 21-ம் நூற்றாண்டில் இந்தியா மக்களை மையப்படுத்திய நிர்வாகத்தை நோக்கி செல்கிறது.
முன்னதாக, திட்டங்களின் பயன்களை பெற அரசை நோக்கிச் செல்வது மக்களின் பொறுப்பாக இருந்தது என்று அவர் கூறினார். ஆனால் தற்போது மக்களை நோக்கி நிர்வாகத்தை எடுத்துச்செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் இணைய தளங்களை மக்கள் நாடுவதிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அரசின் கடன்சார்ந்த திட்டங்களுக்கான தேசிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது பெரும் நடவடிக்கை என்று கூறினார். இந்த கட்டமைப்பு மாணவர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்றும் அவர்களது கனவு நிறைவேற உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
எந்த சீர்த்திருத்தத்திலும் அதன் நோக்கம் தெளிவாக இருந்து, முறையாக அமல்படுத்தினால் சிறந்த முடிவுகள் உறுதி செய்யப்படும் என்று பிரதமர் கூறினார். கடந்த எட்டு ஆண்டுகளாக இளைஞர்களை முக்கியமாக கொண்டு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இது அவர்களுடைய திறனை வெளிப்படுத்த உதவும் என்று கூறினார்.
நமது இளைஞர்கள் அவர்கள் விரும்பிய நிறுவனங்களையும், தொழில்களையும் சுலபமாக தொடங்கி நடத்த முடியும் என்று தெரிவித்தார். நிறுவன சட்டத்தின் பல்வேறு விதிகள் குற்றமற்றவை என்று தீர்மானிக்கப்பட்டு, முப்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதிகள் மற்றும் 1,500க்கும் மேற்பட்ட சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் முன்னோக்கி செல்வதுடன் மட்டுமல்லாமல், புதிய உயரத்தை அடைவதை நாம் உறுதி செய்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசு எளிமைப்படுத்துவதற்கான சீர்த்திருத்தத்தில் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் கூறினார். சரக்கு மற்றும் சேவை வரி மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு வரி கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் செய்யப்படுவதாக கூறினார். அரசு மின்னணு சந்தை இணைய தளம் கொள்முதலை எளிமைப்படுத்தி வருவதாகவும், அரசுக்கு விற்பனை செய்வதை சுலபமாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த இணையதளத்தின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த இணைய தளம் தொழில் செய்வதை எளிமைப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான தகவல்களுக்கான இந்திய முதலீட்டு இணைய தளம் வணிக முறைகளுக்கான ஒற்றை சாளர அனுமதி பற்றி அவர் பேசினார். இது, நாட்டின் இளைஞர்களுக்கும், ஸ்டார்ட்அப் சூழலுக்கும் உதவப் போகிறது’ என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
“சீர்திருத்தம், எளிமைப்படுத்துதல் மற்றும் எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கி நாம் செல்லும் நாம் ஒரு புதிய வசதியை அடைகிறோம், இந்தியா கூட்டாக எதையேனும் செய்ய தீர்மானித்தால், அது உலகிற்கு ஒரு புதிய நம்பிக்கையாக மாறும் என்பதை கடந்த 8 ஆண்டுகளில் நாம் வெளிப்படுத்தியுள்ளோம். உலக நம்மை பெரிய சந்தையாக பார்க்காமல் புதுமையான, மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, ஆக்கப்பூர்வமான, புதிய சுற்றுச்சூழலை அமைப்பதற்கான நாடாக நம்மை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறது என்று தெரிவித்தார்.
உலகின் பெரும்பாலான நாடுகள் இந்தியா பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் என்றும் பிரதமர் கூறினார். ஏனென்றால், கடந்த 8 ஆண்டுகளில் நாம் சாதாரண இந்தியனின் அறிவை நம்பியதால் இது சாத்தியமானது என்று தெரிவித்தார். "வளர்ச்சியில் அறிவுசார்ந்த பங்கேற்பாளர்களாக நாங்கள் பொதுமக்களை ஊக்கப்படுத்தினோம் என்று கூறினார். சிறந்த நிர்வாகத்திற்காக பயன்படுத்தப்படும் எந்த தொழில் நுட்பமும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது மட்டுமல்லாமல், அவர்களால் எப்போதும் பாராட்டப்படுவதையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம்," என்று UPI இன் சாதனையாக பிரதமர் குறிப்பிட்டார்.
***************
(Release ID: 1831548)
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada