பிரதமர் அலுவலகம்

தமிழ்நாட்டில் நீரில் மூழ்கி சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 06 JUN 2022 11:04AM by PIB Chennai

தமிழ்நாட்டின் கடலூரில் நீரில் மூழ்கி சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில், ஏழு சிறுமிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து நான் வேதனையடைந்தேன். இந்தத் துயர் மிகுந்த வேளையில், உறவினர்களை இழந்த குடும்பத்தினர் பற்றி எனது மனம் சிந்திக்கிறது: பிரதமர்”

***************



(Release ID: 1831457) Visitor Counter : 138