பிரதமர் அலுவலகம்

நமது தேசத்தை கட்டமைத்த மகத்தானவர்களை இந்தியா எவ்வாறு நினைவுகூர்கிறது என்பது பற்றிய கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்


கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்த அரசின் பணி குறித்து மைகவ் ட்விட்டர் இணைப்பையும் பகிர்ந்துள்ளார்

Posted On: 02 JUN 2022 1:08PM by PIB Chennai

நமது தேசத்தை கட்டமைத்த மகத்தானவர்களை இந்தியா எவ்வாறு நினைவுகூர்கிறது என்பது பற்றிய பார்வையை  நமோ செயலியின் விகாஸ் யாத்ரா பிரிவில் கட்டுரையாக பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

 “நமது சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையிலான நிகழ்வாக சுதந்திரத்தின் 70-வது ஆண்டுப் பெருவிழாவை இந்த ஆண்டு நாம் நடத்துகிறோம். நமோ செயலியின் விகாஸ் யாத்ரா பிரிவில் உள்ள இந்தக் கட்டுரை நமது தேசத்தை கட்டமைத்த மகத்தானவர்களை இந்தியா எவ்வாறு நினைவுகூர்கிறது என்ற பார்வையை  வழங்குகிறது.

#கலாச்சாரபாதுகாப்பின்8ஆண்டுகள்"

இந்தியாவின் புகழ்மிக்க கலாச்சார பாதுகாப்புக்கு அரசின் பணியை எடுத்துரைக்கும் மைகவ் ட்விட்டர் பதிவையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“நமது புகழ்மிக்க கலாச்சாரத்தில் நாம் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம். அதன் பாதுகாப்புக்கும், கொண்டாட்டத்திற்கும் பணிசெய்யும் வாய்ப்பை பெற்றிருப்பதற்கு நாம் பெருமை கொள்கிறோம். #கலாச்சாரபாதுகாப்பின்8ஆண்டுகள்"

***************



(Release ID: 1830474) Visitor Counter : 149