பிரதமர் அலுவலகம்
தெலுங்கானா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
பலியானோரின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAY 2022 9:00AM by PIB Chennai
தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு திரு மோடி, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“தெலுங்கானா மாநிலம், கமாரெட்டி மாவட்டத்தில் நடந்த விபத்தில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு பிரார்த்தனைகள். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். அதேபோல் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் மோடி”
***
(வெளியீட்டு அடையாள எண்: 1823876)
வருகையாளர் எண்ணிக்கை : 181
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam