பிரதமர் அலுவலகம்
மடகாஸ்கர் அதிபருக்கு நன்றி தெரிவித்த பிரதமர், சிடிஆர்ஐ முயற்சிகளில் பருவநிலை மாற்றத்தால் தீவுநாடுகள் சந்திக்கும் சவால்களை விளக்கினார்
Posted On:
05 MAY 2022 6:25PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, பருவநிலை மற்றும் பேரிடர் விரிதிறன் மேம்பாட்டில் கூட்டணி மூலம் இந்தியா தலைமைத்துவம் பெற்றிருப்பதை அங்கீகரித்துள்ள மடகாஸ்கர் அதிபர் திரு ஆன்ட்ரி நிரினா ரஜோலினாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மடகாஸ்கர் அதிபரின் சுட்டுரைக்கு பதிலளித்து, பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைப்பதிவு வருமாறு;
“நன்றி அதிபர் ரஜோலினா. பருவநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் சந்திக்கும் சவால்கள், பேரிடர் விரிதிறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணியின் கீழ் நமது முன்முயற்சிகள் விரிதிறன் உள்கட்டமைப்பை உருவாக்க முக்கிய மையமாகும்”.
***************
(Release ID: 1823028)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam