பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரபல எழுத்தாளர் பினாபாணி மொகந்தி மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 24 APR 2022 11:30PM by PIB Chennai

பிரபல எழுத்தாளர் பினாபாணி மொகந்தி மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார். பினாபாணி மொகந்தி ஒடியா இலக்கியத்திற்கு குறிப்பாக புதினங்களை எழுதுவதில் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார் என மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

"பிரபல எழுத்தாளர் பினாபாணி  மொகந்தி மறைவை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். பினாபாணி மொகந்தி ஒடியா இலக்கியத்திற்கு குறிப்பாக புதினங்களை எழுதுவதில் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். அவரது படைப்புகள்  பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு புகழ்பெற்றுள்ளன. அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி''.

****************


(Release ID: 1820210) Visitor Counter : 153