பிரதமர் அலுவலகம்

பிரபல ஒடியா இசைக்கலைஞரும், பாடகருமான பிரஃபுல்ல கர் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 18 APR 2022 9:19AM by PIB Chennai

பிரபல ஒடியா இசைக்கலைஞரும், பாடகருமான பிரஃபுல்ல கர் மறைவுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஒடியா கலாச்சாரம் மற்றும் இசைக்கு அவரது முன்னோடி பங்களிப்புக்காக பிரஃபுல்ல கர் அவர்கள் நினைவுகூரப்படுவார் என்று திரு.மோடி கூறியுள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“திரு. பிரஃபுல்ல கர் அவர்களின் மறைவால் வேதனையடைந்தேன். ஒடியா கலாச்சாரம் மற்றும் இசைக்கு அவரது முன்னோடி பங்களிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார். பன்முக ஆளுமை கொண்டிருந்தவர் அவர். அவரது படைப்புகளில் ஆக்கப்பூர்வத்தன்மை பிரதிபலித்தது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.

 

****



(Release ID: 1817723) Visitor Counter : 192