பிரதமர் அலுவலகம்
‘தேர்வுக்கு தயாராவோம்’ நிகழ்ச்சியில், மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் ஏப்ரல் 1, 2022 அன்று, பிரதமர் கலந்துரையாடுகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAR 2022 11:56AM by PIB Chennai
தில்லி தல்கோத்ரா விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 1, 2022 அன்று, நடைபெறும் ‘தேர்வுக்கு தயாராவோம்’ நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி, மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாட உள்ளார். மன அழுத்தமின்றி தேர்வுகளை எழுதுவது குறித்து அவர் உரையாட உள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“மன அழுத்தமின்றி தேர்வுகள் எழுதுவது குறித்து நாம் மீண்டும் பேசுவோம்! ஆற்றல் மிக்க தேர்வு வீரர்கள் (மாணவர்கள்), அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை, 1 ஏப்ரல் அன்று இந்தாண்டிற்கான தேர்வுக்குத் தயாராவோம் நிகழ்ச்சிக்கு வருமாறு அழைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1809963)
வருகையாளர் எண்ணிக்கை : 249
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
Assamese
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu