சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு நிபந்தனை சந்தை அங்கீகாரத்துக்கு தேசிய ஒழுங்குமுறை அமைப்பு அனுமதி
प्रविष्टि तिथि:
27 JAN 2022 4:17PM by PIB Chennai
இந்திய தலைமை கட்டுப்பாட்டு இயக்குநர் ( டிசிஜிஐ) என்னும் தேசிய ஓழுங்குமுறை அமைப்பு, கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சந்தை அங்கீகார அனுமதியை வழங்கியுள்ளது. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்குழுவின் பரிந்துரையை ஏற்று, இந்த தடுப்பூசிகளுக்கு , கட்டுப்படுத்தப்பட்ட அவசரகால பயன்பாட்டு நடைமுறையிலிருந்து, வயது வந்தோருக்கு பயன்படுத்தும் புதிய மருந்து என்னும் மேம்பாட்டு அனுமதி ஜனவரி 19-ந்தேதி வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி நிறுவனங்கள் வெளிநாடுகளில் நடைபெற்று வரும் பரிசோதனைகளின் தரவுகளைப் பகுப்பாய்வு விவரத்துடன் ஆறு மாத காலத்திலோ அல்லது எப்போது கிடைக்கிறதோ, எது முன்னதோ அப்போது வழங்கவேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு சந்தை அங்கீகாரம் வழங்கப்படும்.
மேலும், உள்நாட்டில் செலுத்தப்பட்ட தடுப்பூசி பற்றிய விரங்கள் அனைத்தும் கோவின் தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதுபற்றிய தரவுகளை ஆறு மாத காலத்திலோ அல்லது எப்போது கிடைக்கிறதோ, எது முன்னதோ அப்போது வழங்கவேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு ஆங்கிலச் செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792956
-----
(रिलीज़ आईडी: 1792991)
आगंतुक पटल : 279
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam