பிரதமர் அலுவலகம்
15-18-க்கு இடைபட்ட வயதுள்ள இளையோரில் 50% பேர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தியிருப்பதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 JAN 2022 10:01AM by PIB Chennai
15-18-க்கு இடைபட்ட வயதுள்ள இளையோரில் 50% பேர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தியிருப்பதற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது;
“இளைய மற்றும் இளமைத்தன்மையுள்ள இந்தியா வழிகாட்டுகிறது!
இது ஊக்கமளிக்கும் செய்தியாகும். இந்த வேகத்தை தொடர்ந்து நாம் பராமரிப்போம்.
தடுப்பூசி செலுத்துவதும், கொவிட்-19 தொடர்பான விதிமுறைகள் அனைத்தையும் கடைபிடிப்பதும் முக்கியமாகும். அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவோம்”.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1790896)
வருகையாளர் எண்ணிக்கை : 267
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
Gujarati
,
Marathi
,
Telugu
,
Kannada
,
Bengali
,
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi