பிரதமர் அலுவலகம்

15-18-க்கு இடைபட்ட வயதுள்ள இளையோரில் 50% பேர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தியிருப்பதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

Posted On: 19 JAN 2022 10:01AM by PIB Chennai

15-18-க்கு இடைபட்ட வயதுள்ள இளையோரில் 50% பேர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தியிருப்பதற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது;

“இளைய மற்றும் இளமைத்தன்மையுள்ள இந்தியா வழிகாட்டுகிறது!

இது ஊக்கமளிக்கும் செய்தியாகும். இந்த வேகத்தை தொடர்ந்து நாம் பராமரிப்போம்.

தடுப்பூசி செலுத்துவதும், கொவிட்-19 தொடர்பான விதிமுறைகள் அனைத்தையும் கடைபிடிப்பதும் முக்கியமாகும். அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவோம்”.

***



(Release ID: 1790896) Visitor Counter : 189