பிரதமர் அலுவலகம்

ஜார்கண்டின் பாக்கூரில் ஏற்பட்ட பேருந்து விபத்தால் பிரதமர் துயரடைந்தார்


பலியானவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகைக்கு ஒப்புதல் அளித்தார்

Posted On: 05 JAN 2022 8:55PM by PIB Chennai

ஜார்கண்டின் பாக்கூரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தோருக்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தோர் விரைவில் குணமடைய அவர் பிரார்த்தித்துள்ளார்.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும்  கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில்  பிரதமர் கூறியிருப்பதாவது:

ஜார்கண்டின் பாக்கூரில் ஏற்பட்ட பேருந்து விபத்தால் நான் துயரடைந்தேன் சோகமான இந்த தருணத்தில், உயிரிழந்தவர்களின்  குடும்பங்களுக்கு இரங்கல்கள்காயமடைந்தோர் விரைவில் குணமடையட்டும்: PM @narendramodi”

பாக்கூர் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்துதலா ரூ.2 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்



(Release ID: 1787953) Visitor Counter : 113