பிரதமர் அலுவலகம்

மக்கள் பத்ம விருது பெற்ற துலாரி தேவியின் பரிசுக்கு பிரதமர் நன்றி

Posted On: 11 NOV 2021 9:49PM by PIB Chennai

மக்கள் பத்ம விருது பெற்ற துலாரி தேவி அவர்கள் அளித்த பரிசுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

"மக்கள் பத்ம #PeoplesPadma விருது பெற்றவர்களில் துலாரி தேவி அவர்களும் ஒருவர். அவர் பீகாரில் உள்ள மதுபானியைச் சேர்ந்த திறமையானக் கலைஞர்.

விழாவிற்குப் பிறகு விருது பெற்றவர்களுடனான முறைசாரா சந்திப்பின்போது, அவர் தனது கலைப்படைப்பை எனக்குப் பரிசாக வழங்கினார். அவரது இந்தச் செயல் எனது மனதைத் தொட்டது. அவருக்கு எனது நன்றி”, என்று கூறியுள்ளார்.



(Release ID: 1771135) Visitor Counter : 171