பிரதமர் அலுவலகம்

ஆர்.கே.லக்ஷ்மணனின் 100வது பிறந்த நாளைப் பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்

Posted On: 24 OCT 2021 10:30AM by PIB Chennai

கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மணனின் 100வது பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். 2018ல் "டைம்லெஸ் லக்ஷ்மன்" என்ற நூல் வெளியிடப்பட்டபோது அவர் நிகழ்த்திய உரையைத் திரு.மோடி பகிர்ந்துள்ளார்.

"பன்முகத் திறன் வாய்ந்த ஆர்.கே.லக்ஷ்மணன் அவரது 100வது பிறந்தநாளில் நினைவுகூரப்படுகிறார். அவரது கருத்துப்படங்கள் (கார்ட்டூன்கள்) மூலம் காலத்தின் சமூக அரசியல் எதார்த்தங்களை மிக அழகாக அவர் வெளிப்படுத்தியுள்ளார். 2018ல் "டைம்லெஸ் லக்ஷ்மன்" என்ற நூலை நான் வெளியிட்டபோது நிகழ்த்திய உரையைப் பகிர்ந்துள்ளேன் https://t.co/S0srPeZ4hL" என்று பிரதமர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



(Release ID: 1766092) Visitor Counter : 201