பிரதமர் அலுவலகம்

பணியின்போது உயிர்நீத்த காவல்துறையினருக்கு காவலர் நினைவு தினத்தில் பிரதமர் அஞ்சலி

Posted On: 21 OCT 2021 10:51AM by PIB Chennai

பணியின்போது உயிர்நீத்த காவல்துறையினர் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச்செய்தியில்;

“காவலர் நினைவு தினத்தில், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் அவசர காலங்களில் தேவைப்படுவோருக்கு உதவுவதிலும் நமது காவல் படைகளின் தலைசிறந்த பணிகளை ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். பணியின்போது உயிர்நீத்த காவல் துறையினர் அனைவருக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.



(Release ID: 1765387) Visitor Counter : 196