பிரதமர் அலுவலகம்
100% முதல் தவணை கொவிட் தடுப்பூசி செலுத்தியதற்காக உத்தராகண்டின் தேவ்பூமி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
18 OCT 2021 2:50PM by PIB Chennai
18 வயதுக்கு மேற்பட்ட 100% மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக தேவ்பூமி மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கொவிட் -19க்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் உத்தராகண்டின் இந்த சாதனை மிக முக்கியமானது.
உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமியின் டுவிட்டர் செய்திக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளதாவது;
“தேவ்பூமி மக்களுக்கு வாழ்த்துகள். கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் உத்தராகண்டின் சாதனை மிக முக்கியமானது. உலகளாவிய பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நமது தடுப்பூசித் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். மக்களின் உதவியோடு இத்திட்டம் வெற்றிப் பெறும். பங்களிப்பு அவசியம்”
-------
(வெளியீட்டு அடையாள எண்: 1764687)
வருகையாளர் எண்ணிக்கை : 309
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam