பிரதமர் அலுவலகம்

திரு.விசாசோலி லோங்கு மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 12 OCT 2021 9:51PM by PIB Chennai

நாகாலாந்தை சேர்ந்த திரு.விசாசோலி லோங்கு மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:

திரு.விசாசோலி லோங்கு கடின உழைப்பாளி என்பதோடு அர்ப்பணிப்பு உணர்வுடன், நாகாலாந்து வளர்ச்சி மற்றும் நாகா மக்களுக்கு அதிகாரமளிக்க அயராது பாடுபட்டவர். அம்மாநிலத்தில் பிஜேபியை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர் ஆவார். அவரது மறைவால் மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.



(Release ID: 1763753) Visitor Counter : 144