பாதுகாப்பு அமைச்சகம்

குடும்ப ஓய்வூதியத்தை பெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகள்/ உடன் பிறந்தோரின் வருமான வரம்பு உயர்வு

Posted On: 28 SEP 2021 3:01PM by PIB Chennai

குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படும், மன நலம் குன்றிய அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகள்/ உடன்பிறந்தவர்களின் வருவாய் வரம்பை மேம்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி இதுபோன்ற குழந்தை/ உடன் பிறந்தவரது ஒட்டுமொத்த வருமானம் (குடும்ப ஓய்வூதியம் தவிர்த்த ஆதாரங்களின் மூலம்) சாதாரண விகிதத்திலான குடும்ப ஓய்வூதியத்தை விட குறைவாக இருந்தால், (அதாவது உயிரிழந்த அரசு ஊழியர்/ ஓய்வூதியதாரர் கடைசியாக பெற்ற தொகையில் 30 சதவிகிதமும்அகவிலைப்படியும்) வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதி பெறுவார்கள்.

08.02.2021 முதல் இந்த நிதி உதவி அமலுக்கு வரும். தற்போது மாதந்தோறும் ரூ. 9000க்குள் வருமானமும் அகவிலைப்படியும் பெரும் மாற்றுத்திறனாளி குழந்தை/ உடன்பிறந்தோர் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி பெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758906

 

 



(Release ID: 1759012) Visitor Counter : 611