பிரதமர் அலுவலகம்

குலாப் புயல் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வருடன் பிரதமர் பேச்சு

Posted On: 26 SEP 2021 3:50PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆந்திரப் பிரதேச முதல்வர் திரு ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டியுடன் உரையாடி குலாப் புயலினால் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் பிரதமர் உறுதி தெரிவித்தார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

ஆந்திரப் பிரதேச முதல்வர் திரு ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டியுடன் பேசி, குலாப் புயலினால் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தேன்அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்தேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலனிற்காக நான் பிரார்த்திக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.



(Release ID: 1758328) Visitor Counter : 209