பிரதமர் அலுவலகம்

பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான வட்டு எறிதல் பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்ற வினோத் குமாருக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 29 AUG 2021 6:49PM by PIB Chennai

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான வட்டு எறிதல் பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்ற வினோத் குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் தகவல் வெளியிட்ட பிரதமர் கூறியதாவது:

‘‘வினோத் குமாரின் அற்புதமான செயல்பாட்டுக்கு இந்தியா மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கிறது! வெண்கலப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது கடின உழைப்பு மற்றும் உறுதி, சிறந்த முடிவுகளை அளித்துள்ளது என்று கூறியுள்ளார். #Paralympics’’

*****************

 



(Release ID: 1750262) Visitor Counter : 244