பிரதமர் அலுவலகம்
இரு அவைகளிலும் அரசியலமைப்புச் சட்ட (127-வது திருத்த) மசோதா 2021 நிறைவேற்றம் : பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
11 AUG 2021 11:00PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அரசியலமைப்புச் சட்ட (127-வது திருத்த) மசோதா 2021 நிறைவேறி உள்ளதை பிரதமர் திரு.நரேந்திர மோடி நமது நாட்டின் மைல்கல் தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளதாவது :
“நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அரசியலமைப்புச் சட்ட (127-வது திருத்த) மசோதா 2021 நிறைவேறி உள்ளது நமது நாட்டின் மைல்கல் தருணம். சமூக அதிகாரமயமாக்கலை இந்த மசோதா அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும். விளிம்பு நிலை பிரிவினரின் மாண்பு, வாய்ப்பு மற்றும் நீதியை உறுதிப்படுத்தும் அரசின் கடப்பாட்டை இது பிரதிபலிக்கிறது”.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1745045)
வருகையாளர் எண்ணிக்கை : 301
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam