பிரதமர் அலுவலகம்

தெலங்கானாவின் நகர்கர்னூலில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்


பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவிப்பு

Posted On: 23 JUL 2021 9:59PM by PIB Chennai

தெலங்கானா மாநிலத்தின் நகர்கர்னூலில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு  50,000 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “தெலங்கானாவின் நகர்கர்னூலில் நிகழ்ந்த விபத்தில் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்: பிரதமர் திரு மோடி”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 ********************
 



(Release ID: 1738601) Visitor Counter : 367