பிரதமர் அலுவலகம்

அதிபர் ஜோவெனல் மோஸின் படுகொலைக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 09 JUL 2021 8:23AM by PIB Chennai

ஹைட்டி நாட்டு அதிபர் திரு ஜோவெனல் மோஸ் படுகொலை செய்யப்பட்டதற்கும் , முதல் பெண்மணி திருமதி மார்ட்டின் மோஸ் மீதான தாக்குதலுக்கும், பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், "ஹைட்டி நாட்டு அதிபர் திரு ஜோவெனல் மோஸின் படுகொலையையும், ஹைட்டியின் முதல் பெண்மணி மார்ட்டின் மோஸ் மீதான தாக்குதலையும் அறிந்து வருத்தமடைந்தேன். அதிபர் திரு மோஸின் குடும்பத்திற்கும், ஹைட்டி மக்களுக்கும் எனது இரங்கல்கள்" என்று கூறியுள்ளார்.

 

****



(Release ID: 1734108) Visitor Counter : 174