பிரதமர் அலுவலகம்

47-வது ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்துக் கொள்கிறார்

Posted On: 10 JUN 2021 6:34PM by PIB Chennai

இங்கிலாந்து பிரதமர் திரு போரிஸ் ஜான்சனின் அழைப்பை ஏற்று, ஜி7 உச்சி மாநாட்டின் அமர்வுகளில் ஜூன் 12 மற்றும் 13 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்கிறார். ஜி7-க்கு தற்போது தலைமையேற்றுள்ள இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கொரிய குடியர்சு மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை விருந்தினர்களாக ஜி7 உச்சி மாநாட்டிற்கு அழைத்துள்ளது நேரடி மற்றும் காணொலி ஆகிய முறைகளில் இம்மாநாடு நடைபெறும்.

சிறப்பான முறையில் மீண்டும் கட்டமைப்போம்என்பது இந்த உச்சி மாநாட்டின் மையப்பொருளாக இருக்கும். கொரோனாவில் இருந்து சர்வதேச அளவில் மீண்டு எதிர்கால பெருந்தொற்றுகளுக்கு எதிரான உறுதியை வலுப்படுத்துதல்; சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கு ஆதரவளித்து எதிர்கால வளத்தை ஊக்கப்படுத்துதல்; பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு பூமியின் பல்லுயிராக்கத்தை காத்தல்; மற்றும் பகிர்ந்து கொள்ளும் மதிப்பீடுகள் மற்றும் திறந்தவெளி சமூகங்களை ஊக்குவித்தல் ஆகிய நான்கு முன்னுரிமைகளை உச்சி மாநாட்டிற்காக இங்கிலாந்து வகுத்துள்ளது.

 

பெருந்தொற்றில் இருந்து உலகம் விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்த கருத்துகளை உச்சி மாநாட்டின் போது தலைவர்கள் பரிமாறிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி7 கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்வது இது இரண்டாவது முறையாகும். பிரான்சு தலைமையில் 2019-ல் நடைபெற்ற பியாரிட்ஸ் உச்சி மாநாட்டில்நல்லெண்ண பங்குதாரராகபங்கேற்ற பிரதமர்பருவநிலை, பல்லுயிராக்கம் மற்றும் கடல்கள்மற்றும்டிஜிட்டல் மாற்றம்ஆகிய அமர்வுகளில் கலந்துக் கொண்டார்.

 

-----



(Release ID: 1726041) Visitor Counter : 216