பிரதமர் அலுவலகம்

திரு டிங்கோ சிங்கின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 10 JUN 2021 11:31AM by PIB Chennai

குத்துச் சண்டை வீரர் திரு டிங்கோ சிங்கின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் திரு.மோடி வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:

திரு டிங்கோ சிங், தலைசிறந்த விளையாட்டு வீரராகவும், ஏராளமான வெற்றிகளைக் குவித்த முன்னணி குத்துச்சண்டை வீரராகவும் திகழ்ந்தார். குத்துச் சண்டை மேலும் பிரபலமடைவதற்கு, அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அன்னாரது மறைவினால் துயரடைந்தேன். அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி!”.

                                                                                                                      -----

 


(வெளியீட்டு அடையாள எண்: 1725928) வருகையாளர் எண்ணிக்கை : 250