பிரதமர் அலுவலகம்

மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட உயிர் இழப்புக்கு பிரதமர் இரங்கல்; நிதியுதவி அறிவிப்பு

Posted On: 07 JUN 2021 9:03PM by PIB Chennai

மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட  உயிர் இழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுட்டுரை வாயிலாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் மின்னல் தாக்கியதால், தமது உறவினர்களையும், நெருக்கமானவர்களையும் இழந்த அனைவருடனும், எனது எண்ணங்களால் துணை நிற்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்" என்று பிரதமர் கூறியுள்ளார்.

பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, மின்னல் தாக்குதலால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 அளிப்பதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

                                                    *****************



(Release ID: 1725309) Visitor Counter : 160