பிரதமர் அலுவலகம்

யோகா குரு சுவாமி ஆத்யாத்மானந்தா ஜி அவர்களின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 08 MAY 2021 3:37PM by PIB Chennai

யோகா குரு சுவாமி ஆத்யாத்மானந்தா ஜி அவர்களின் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், அன்னாருக்கு மரியாதை செலுத்தியிருப்பதுடன், ஆன்மீகம் சார்ந்த ஆழ்ந்த கருத்துக்களுக்கு எளிமையான முறையில் அவர்  விளக்கங்கள் அளித்ததை நினைவுக்கூர்ந்தார்.

யோகா கற்றுத்தந்ததுடன், அகமதாபாத்தில் உள்ள சிவானந்தா ஆசிரமத்தில் மேற்கொள்ளப்படும் ஏராளமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின் மூலம் சுவாமி அவர்கள் சமுதாயத்திற்கும் சேவை புரிந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

-------

 


(வெளியீட்டு அடையாள எண்: 1717025) வருகையாளர் எண்ணிக்கை : 209