பிரதமர் அலுவலகம்

திரு.ஜக்மோகன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 04 MAY 2021 8:55AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, திரு.ஜக்மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “ஜக்மோகன் அவர்களின் மறைவு நமது நாட்டுக்கு பேரிழப்பாகும். அவர் மிகச் சிறந்த நிர்வாகியும், பேரறிஞருமாவார். அவர் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக எப்பொழுதும் பாடுபட்டு வந்தார். அவர் நிர்வாகத்தில் இருந்தபோது புதுமையான கொள்கை முடிவுகளை மேற்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று கூறியுள்ளார்.

 

***



(Release ID: 1715841) Visitor Counter : 124