பிரதமர் அலுவலகம்

திரு.சோலி சொரப்ஜி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 30 APR 2021 11:32AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, திரு.சோலி சொரப்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரு.மோடி, சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “திரு.சோலி சொரப்ஜி மிகச் சிறந்த வழக்கறிஞரும், அறிஞருமாவார். வறியவர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சட்டத்தின் மூலம் உதவுவதில் முன்னணியில் இருந்தார். இந்தியாவின் அட்டார்னி ஜெனரலாக அவர் ஆற்றிய அரும்பணிக்கு என்றும் நினைவு கூரப்படுவார். அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

***



(Release ID: 1714989) Visitor Counter : 130