பிரதமர் அலுவலகம்

குடிமைப் பணிகள் நாளன்று அரசு அலுவலர்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 21 APR 2021 9:19AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, குடிமைப் பணிகள் நாளான இன்று அனைத்து அரசு அலுவலர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “குடிமைப் பணிகள் நாளான இன்று அனைத்து அரசு அலுவலர்களுக்கும் நல்வாழ்த்துகள். பல்வேறுபட்ட நிலப்பரப்புகளிலும், பலவிதமான துறைகளிலும், நமது குடிமக்களுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்தை மேம்படுத்தவும், அவர்கள் அயராது பாடுபட்டு வருகின்றனர். இதே ஊக்கத்துடன் அவர்கள் தேசத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவார்களாக” என்று கூறியுள்ளார்.

 

************



(Release ID: 1713180) Visitor Counter : 233