பிரதமர் அலுவலகம்

ராம நவமி திருநாளுக்கு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டுகோள்

Posted On: 21 APR 2021 9:21AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, ராம நவமி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ராம பகவானின் திருவருள் அனைவருக்கும் தொடர்ந்து கிடைக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் திரு.மோடி சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பகவான் ராமரின் பணிவன்பை கடைபிடிக்கவும், கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடின முயற்சிக்கு பின் தடுப்பு மருந்து நமக்கு கிடைத்துள்ளதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

 

*******************



(Release ID: 1713179) Visitor Counter : 134