பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாகூரின் பிறந்தநாள் அன்று பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
09 APR 2021 8:17PM by PIB Chennai
ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாகூரின் பிறந்தநாள் அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்
"ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாகூரின் பிறந்தநாள் அன்று அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவரது வாழ்வும் இலட்சியங்களும் தொடர்ந்து பலருக்கு வலுவூட்டி வருகிறது. கல்விக்கும், சமூக அதிகாரமளித்தலுக்கும் அவர் மிகவும் முக்கியத்துவம் வழங்கினார்.
மத்வா சமூகத்தின் அன்பு மற்றும் கருணை மிகுந்த குணத்தில் அவரது உயரிய குணங்கள் பிரதிபலிக்கின்றன," என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் கூறியுள்ளார்.
ஒரக்கண்டி தாகூர் பாரிக்கு தாம் சமீபத்தில் சென்றபோது அங்கு பேசியதையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
"ஒரு சில வாரங்களுக்கு முன்பு, ஒரக்கண்டி தாகூர் பாரிக்கு நான் சென்றிருந்தேன். ஆசீர்வதிக்கப்பட்ட அந்த நிமிடங்களை நினைத்து என்றைக்கும் நான் மகிழ்வேன். ஒரக்கண்டி கூட்டத்தில் நான் பேசியதை பகிர்கிறேன்."
*****************
(रिलीज़ आईडी: 1710747)
आगंतुक पटल : 179
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam