சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மகாராஷ்டிரா, தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் தினசரி கொவிட் பாதிப்பு அதிகரிப்பு: நாடு முழுவதும் 6.3 கோடிக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

Posted On: 31 MAR 2021 12:12PM by PIB Chennai

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, கேரளா, குஜராத், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில், தினசரி கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 53,480 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 84.73 சதவீதம் பேர் மேற்கண்ட எட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக, தினசரி கொவிட் பாதிப்பு 27,918 ஆக உள்ளது.

நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 5,52,566 ஆக உள்ளது.

நாட்டில் கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.3 கோடியைக்  கடந்து விட்டது. இன்று காலை 7 மணி வரை, 6,30,54,353 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

74 வது நாளான நேற்று, மொத்தம் 19,40,999 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,14,34,301- எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 41,280 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 354 பேர், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1708656

******

(Release ID: 1708656)



(Release ID: 1708671) Visitor Counter : 200