சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 94 லட்சத்தை கடந்தது: உலகளவில் 3வது இடம்

Posted On: 18 FEB 2021 10:52AM by PIB Chennai

இந்தியாவில் கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 94 லட்சத்தை கடந்ததுகொவிட் தடுப்பூசி போடுவதில் அமெரிக்கா, இங்கிலாந்துக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

2021 பிப்வரி 18 ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படிகொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் எண்ணிக்கை 94 லட்சத்தை கடந்தது. பயனாளிகளுக்கு 94,22,228 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இவர்களில் 61,96,641 பேர்  முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள். 3,69,167 பேர் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள். 28,56, 420  பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட முன்களப் பணியாளர்கள்.

33 ஆம் நாளான இன்று 4,22,998 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, இன்று 1.06 கோடி (1,06,56,845). குணமடைந்தோர் எண்ணிக்கை 97.32 சதவீதம்

நாட்டில் தற்போது கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,37,342. மொத்த பாதிப்பில் 1.25 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 11,987 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  

கடந்த 24 மணி நேரத்தில் 12,881 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  101 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக கேரளாவில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698949

-----

 



(Release ID: 1699126) Visitor Counter : 167