சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அதிக பயனாளிகளுக்கு கொவிட்-19 தடுப்பூசியை வழங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்
Posted On:
07 FEB 2021 11:59AM by PIB Chennai
பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மேலும் ஒரு சர்வதேச சாதனையை படைத்துள்ளது.
அதிக பயனாளிகளுக்கு கொவிட்-19 தடுப்பூசியை வழங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது.
அமெரிக்கா, இங்கிலாந்தைத் தொடர்ந்து இந்தியா இந்த இடத்தைப் பிடித்துள்ளது.
12 மாநிலங்களில் தலா இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மட்டும் 6,73,542 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 7, 2021 காலை 8 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 1,66,408 & புதுச்சேரியில் 3,532 பேர் உட்பட இதுவரை 57.75 லட்சத்திற்கும் அதிகமான (57,75,322) பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
53,04,546 சுகாதார பணியாளர்களுக்கும், 4,70,776 முன்கள ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 8,875 முகாம்களில் 3,58,473 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுவரை 1,15,178 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அன்றாடம் தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் பயனாளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது.
மற்றொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக கடந்த 24 மணி நேரத்தில் 80 க்கும் குறைவான உயிரிழப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளன. இது கடந்த ஒன்பது மாதங்களில் ஏற்பட்ட தினசரி உயிரிழப்புகளில் மிகவும் குறைந்த எண்ணிக்கையாகும்.
நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.48 லட்சமாகக் (1,48,766) குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 1.37 சதவீதமாகும்.
நாட்டில் மொத்தமாக 1,05,22,601 பேர் (97.19%) குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 12,059 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில், இதே காலகட்டத்தில் 11,805 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதிதாக குணமடைந்தவர்களில் 81.07 சதவீதத்தினர் 6 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள்.
கேரளாவில்தான் அதிகபட்சமாக 6,178 பேர் குணமடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 1,739 பேரும், தமிழகத்தில் 503 பேரும் குணமடைந்துள்ளனர்.
தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 5,942 பேரும், மகாராஷ்டிராவில் 2,768 பேரும், கர்நாடகாவில் 531 பேரும் ஒரே நாளில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 78 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 17 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695914
------
(Release ID: 1695945)