பிரதமர் அலுவலகம்

தில்லியில் நடைபெறும் என்சிசி முகாமில், பிரதமர் நாளை உரையாற்றுகிறார்

Posted On: 27 JAN 2021 4:34PM by PIB Chennai

தில்லி கரியப்பா மைதானத்தில் நடைபெறும், தேசிய மாணவர் படை முகாமில், பிரதமர் திரு நரேந்திர மோடி  2021 ஜனவரி 28ம் தேதி உரையாற்றுகிறார்.  பாதுகாப்பு அமைச்சர், முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.

என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் பிரதமர், அவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார்.

*******



(Release ID: 1692680) Visitor Counter : 144